கருவுறுதல் என்பது பல நேரங்களில் திட்டமிடாது நடப்பது தான். ஆனால், அதனைத் திட்டமிட்டு செயல்படும்போது பல்வேறு நன்மைகள் அதில் உள்ளன. பொதுவாக மாதவிடாய் முதல் 10-15 நாட்களில் கருவுறுதல் என்பது பெரும்பாலானோர் அறிந்ததே. ஆனால், அதற்கு முன் தயாராக வேண்டியவற்றை தற்போது காணலாம்.

திருமண வாழ்வின் முக்கிய அங்கமான மகப்பேறுவில் திட்டமிடுதல் ஆரோக்யமான குழந்தையை பெற்றெடுக்க உதவும். இதற்கென உரிய சில மாதங்களும், ஆகாத சில மாதங்களும் கூட உள்ளதாக நம்பிக்கை உள்ளது. அதேபோல், நல்ல நேரம் கெட்ட நேரம் என்பதும் அவரவர் நம்பிக்கை சார்ந்தது.

குழந்தை பெற முடிவெடுத்தால் 3 மாதங்களுக்கு முன்பே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். உடற்பிரச்னைக்காக மருந்து எடுத்துக் கொண்டிருந்தால் அதையும் கலந்து ஆலோசிக்க வேண்டும். இதைக் கலந்தாலோசிக்காது மருந்தைத் தொடரும்போது, அது குழந்தை வளர்ச்சியை பாதிக்குமா என்பதை முன்கூட்டியே கேட்டு அறிதல் அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஃபோலிக் ஆசிட் என்பது அவசியம். இது வெறும் உணவு வழியே மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. மாத்திரையாகவும் ஃபோலிக் ஆசிட் எடுத்துக் கொள்வது அவசியம். ஃபோலிக் ஆசிட்டும், கால்சியமும் உடலில் பேறு காலத்தில் மிக அவசியமான சத்துக்கள் ஆகும். அதே போல் இரும்புச் சத்தும் ஹியூமோகுளோபினும் குறையாமல் பார்த்துக் கொள்தல் அவசியம்.

குழந்தை பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே, உடற்பயிற்சி அவசியம். அலுவலகம் விட்டு வரும் போது, அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கோ, ரயில் நிலையத்துக்கோ செல்லாது அடுத்த நிறுத்தம் வரை நடந்து செல்லலாம். அல்லது முந்தைய நிறுத்தத்தில் இறங்கி வீடு வரை நடந்து செல்லலாம்.

ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் இல்லாமல் பார்த்துக் கொள்தல் அவசியம் ஆகும். ஒருவேளை கர்ப்பச் சக்கரை அதாவது ஜெஸ்டேசனல் டயாபடிக்ஸ் வராது கவனிப்பது அவசியமாகிறது. அது ஏற்படாதபடி, உணவுப் பழக்கத்தையும் வாழ்வியல் முறைகளையும் மாற்றிக் கொள்தல் மிகவும் அத்யாவசியமாகிறது.

முதல் குழந்தைக்கு மட்டுமல்ல. இரண்டாவது குழந்தைக்கும் திட்டமிடுதல் என்பது முக்கியம். ஒரு குழந்தை பிறந்த பிறகு அடுத்த குழந்தைக்கு 18 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை இடைவெளி தேவைப்படும். இதன்மூலம், அடுத்த குழந்தைக்கு தேவையான சத்தை வழங்குவதற்கு உங்களது உடலும் தயாராகும்.

முந்தைய குழந்தைக்கான பாலூட்டுதலும், அதைப் பராமரிக்கத் தேவையான சவுகர்யங்களும் இருக்கிறதா? என்பதைப் பார்க்க வேண்டும். முந்தைய குழந்தை சிசேரியன் எனில், தாய் தனது உடல்நிலையை மீட்டமைக்க சற்று அதிக காலம் எடுக்கும். குழந்தை பிறந்த பிறகு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் சுரப்பு இருக்கும் என்பதால் கருமுட்டை உற்பத்தி இருக்காது.

முறையற்ற மாதவிடாயை சீரமைக்க வேண்டும். பெண்ணின் உடல்நிலையை மருத்துவரிடம் பரிசோதித்து குழந்தையை பெறும் சக்திக்கு ஈடு செய்ய தயாராக இருக்கிறதா? என்பதை அறிய வேண்டும்.

ஆரோக்யமான குழந்தையை ஈன்றெடுக்க த காரிகையின் வாழ்த்துகள். இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்து கொள்ள த காரிகையின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின் தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE