தமிழ் திரை உலகில் நடிகர் சூர்யா தேர்வு செய்யும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் வித்தியாசமானவையாகவே இருக்கும். வழக்கமான சூப்பர் ஹீரோ, ஆக்சன் ஹீரோ, ரொமாண்டிக் ஹீரோ வரிசையில் வராமல் இவர் வினோதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றார். பெரும்பாலான ஹீரோக்கள் கையில் எடுத்து நடித்துக் கொடுக்க தயங்கும் சில கதாபாத்திரங்களை சூர்யா திறம்பட செய்து வெற்றி கண்டவர்.

நந்தா, பேரழகன், மௌனம் பேசியதே, பிதாமகன், கஜினி, அயன், மாயாவி சமீபத்தில் வெளியான ஜெய் பீம் வரை அனைத்து கதாபாத்திரங்களும் கேட்டவுடன் மனதில் பதியக்கூடியவையாக சிறப்பாக சித்தரித்து இருந்தார் சூர்யா.

தமிழ் திரை உலகில் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் ‘அகறம்’ என்ற அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்தார். அதன் மூலம் படிக்க முடியாத ஏழை குழந்தைகளுக்கு கல்வியை வழங்கி வருகிறார். இந்த நன்மதிப்பும் சூர்யாவுக்கு அதிக ரசிகர் பட்டாளத்தை பெற்றுக் கொடுத்தது.

நடிகை ஜோதிகாவை திருமணம் செய்த சூர்யா தனது மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோரின் பெயரில் 2D என்டர்டைன்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது மகள் தியாவின் மேற்படிப்புக்காக வீடு ஒன்றை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பையில் மிகப்பெரிய பாலிவுட் நடிகர், நடிகைகள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தான், நடிகர் சூரியாவின் புதிய அபார்ட்மெண்டும் வாங்கப்பட்டுள்ளது.

9000 சதுர அடி பரப்பளவில் தனியாக தோட்டத்திற்கான இடத்துடன் வாங்கப்பட்டுள்ள இந்த அபார்ட்மெண்டின் மதிப்பு ரூ. 70 கோடி ஆகும். அதுமட்டுமின்றி தனியாக பல கார்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் ஸ்பேசையும் வாங்கி உள்ளாராம் சூர்யா. தனது வீட்டில் இருந்து சிவகுமார், தாயார், கார்த்தி மற்றும் குடும்பத்தார், சகோதரி பிருந்தா மற்றும் குடும்பத்தார், ஜோதிகாவின் குடும்பத்தார் ஆகியோர் வரும்போது எல்லாம் தங்குவதற்காக இதை கெஸ்ட் ஹவுஸ் ஆக பயன்படுத்த விருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட கொண்டாட்டங்களையும் இங்கு நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யாவின் 2d என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சூரரை போற்று படத்தின் ஹிந்தி வர்ஷனை நடிகர் அக்ஷய் குமாரை கொண்டு தயாரித்து வருகிறார். மும்பை விமான நிலையத்தில் கார் பார்க்கிங் ஸ்பேசையும் சூர்யா வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் நடிகர் சூர்யா பாலிவுட் பக்கம் காய் நகர்த்துவதாகவும் அங்கேயே செட்டில் ஆகி விடுவார் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் அவர் தமிழ் ரசிகர்களையும் அவர்களது எதிர்பார்ப்புகளையும் தொடர்ந்து பூர்த்தி செய்வார் என்றும் நம்பப்படுகிறது.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE