மீ டூ பற்றி மனம் திறந்த சாய் பல்லவி

“மீ டூ புகார் என்பது உடல் ரீதியான துன்புறுத்தல் மட்டுமல்ல, வார்த்தை ரீதியானதும் தான்“ – சாய்பல்லவி

மீ டூ இயக்கம் ஹாலிவுட்டில் தொடங்கி, பாலிவுட் கோலிவுட் வரை பெண்களிடம் அத்துமீறியவர்களை கதி கலங்கச் செய்த ஒரு இயக்கம். “எங்கே நம் மீது ஏதும் புகார் வந்துவிடுமோ?’‘ என பல திரையுலக பிரபலங்களும் அச்சத்தில் வாழ்ந்தனர். சமூக ஊடகங்களில் பெண் பித்தர்களை தோலுரித்துக் காட்டும் இந்த இயக்கம் இன்று வரை பிரபலங்களின் நேர்காணலில் பேசுபொருளாகத்தான் உள்ளது.

ஹார்வே வெயின்ஸ்டீன் என்பவர் படத்தில் நடிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக பல நடிகைகளை தன்னுடன் தவறான உறவு வைத்துக் கொள்ள நிர்பந்தித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஒரு பெண் டிவிட்டரில் வெளிப்படுத்தியதும், அடுத்தடுத்து புற்றீசல் போல தன்னையும் அவர் அழைத்ததாகக் கூறி, #MeToo என ஹேஸ் டேக் இட்டு ஏராளமான நடிகைகள் குற்றம்சாட்டினர்.

இதேபோல் ஹாலிவுட்டிலும் சில பெண் பித்தர்கள் சிக்கினர். மீ டூ புகாரில் பட வாய்ப்பு வழங்குவதாகக் கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக ஸ்ரீ ரெட்டியும் தமிழ்நாட்டு நடிகர்கள் இயக்குனர்கள் மீது குற்றம்சாட்டியிருந்தார். மாரி 2 படம் வெளிவந்திருந்த சமயம் மீ டூ பற்றி சாய் பல்லவியும் மவுனம் களைத்தார்.

“என் படத்தில் திரைப்பட இயக்குனர் ஒரு உதட்டு முத்தக் காட்சியில் ஹீரோவுடன் நடிக்கச் சொன்னார். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன். இயக்குனர் தொடர்ந்து நிர்பந்தித்தார். அப்போது உடன் இருந்த நடிகர், அப்போது பிரபலமாக இருந்த மீ டூ பிரச்சாரம் பற்றி எடுத்துரைத்தார். எனவே, அந்த முத்தக்காட்சி கைவிடப்பட்டது. மீ டூ வால் தான் முத்தத்தில் இருந்து தப்பினேன்” என சாய் பல்லவி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்திய ஒரு நேர்காணலிலும் மீ டூ பற்றிய கேள்வியை எதிர்கொண்டார் சாய்பல்லவி. “உடலளவில் மட்டுமல்ல, வார்த்தை அளவில் பெண்களைக் காயப்படுத்தினாலும்,தொந்தரவு செய்தாலும் கூட அதுவும் மீ டூ புகாரில் தான் சேரும் “ என பதிலளித்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி “புஷ்பா த ரூல்“ என்ற படத்தில் அல்லு அர்ஜுனுக்கு கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகாவும் இருந்தாலும், சாய் பல்லவி உடைய கதாப்பாத்திரம் மிக முக்கியமானதாக அமையும் என கூறப்படுகிறது. படத்தின் 2-வது ஷெட்யூலில் ஒரே வாரத்தில் சாய் பல்லவி நடித்துக் கொடுக்க வேண்டி இருக்கிறதாம். ஆனால் இந்த தகவல் பற்றி தயாரிப்பாளர் தரப்போ, சாய் பல்லவி தரப்போ இதுவரை ஏதும் அதிகாரப் பூர்வ தகவலை வெளியிடவில்லை.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE