39 மனைவி 94 பிள்ளை ஒரே வீட்டில் 200 பேர் . . எப்புட்ரா?

ஊருக்குள்ள ஓராயிரம் பிரண்ட்ஸ் வைத்திருக்கிறவன் எல்லாம் நிம்மதியா இருக்கான். ஆனா ஒரே ஒரு பிரண்டை வெச்சுட்டு நான் படுற கஷ்டம் இருக்கே. அய்யூய்யூய்யோய்யோ. . . என சந்தானம் புலம்ப கேட்டு இருப்போம். அதே டயலாக்கை மாற்றி ஒரே மனைவியை வைத்திருப்பவர்கள் அனைவரும் ரீல்ஸ் போட்டு வந்தனர். இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு 39 மனைவிகளும் அவர்களின் வாயிலாக 94 பிள்ளைகளும் உள்ளனர். இவர்களின் மொத்த குடும்ப எண்ணிக்கை 200 வரை கடந்துவிட்டது. இதை உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் 200 பேர் கொண்ட ஒரே குடும்பம் என்று தான் இதனை சொல்ல வேண்டும்.

மிசோரம் மாநிலத்தில் உள்ள சனா என்ற இனத்தைச் சேர்ந்தவர் ஷியோனா. இவர் தனது தந்தையை போன்றும் தனது முன்னோர்களை போன்றும், அதிகளவிலான மனைவிகளை மணப்பதில் அதிக விருப்பம் கொண்டிருந்தார். முதல் முதலாக தனது 17 வயதில் திருமணம் செய்து கொண்ட இவர் சில சமயம் ஒரே ஆண்டில் 17 பெண்களை கூட இவர் திருமணம் செய்து இருக்கிறார்.

இதன் விளைவாக இவர் இறக்கும் தருவாயில் 39 மனைவிகளை திருமணம் செய்து இருக்கிறார்.

இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே மிகப்பெரிய குடும்பம் என்றும் இது பெயர் பெற்ற புகழ் அடைந்தது.

இவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தான் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் வசிப்பதற்காகவே 100 அறைகள் கொண்ட 4 மாடி குடியிருப்பு போன்ற ஒரு பிரம்மாண்ட வீடு மலைப் பகுதியில் கட்டப்பட்டுள்ளது.

இந்த குடும்பத்தின் தலைவர் அனைவரின் மீதும் ஒரே மாதிரியான அன்பையும் பாசத்தையும் வைத்திருந்ததால் தான் அவர்கள் எளிதாக குடும்பத்தில் சிக்கல் வராமல் பராமரித்து ஒரே வீட்டில் வசிப்பதாக கூறப்படுகிறது. 39 மனைவிகளுக்கு பிறந்த 94 பிள்ளைகளும் அவர்களது மனைவிகளும் அவர்களது பேரக்குழந்தைகள் உடன் ஒரே வீட்டில் கலகலப்பாக வசித்து வருகின்றனர்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE